மத்திய அரசின் 100 சதவிகிதம் மானியத்தில் சொட்டு நீர் பாசனம்

மத்திய அரசின் 100 சதவிகிதம் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் விண்ணப்பம் பதிவு செய்யும் பணி கபிலர்மலை வட்டாரத்தில் நடைபெறுகிறது.

Update: 2024-07-01 16:29 GMT

மத்திய அரசின் 100 சதவிகிதம் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் விண்ணப்பம் பதிவு செய்யும் பணி கபிலர்மலை வட்டாரத்தில் நடைபெறுகிறது.


நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து கபிலர்மலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சின்னத்துரை செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது. நடப்பு ஆண்டில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 180 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி சிறு/குறு விவசாய்களுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைந்திட 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சொட்டு நீர் பாசனம் அமைக்க பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம். சிட்டா, அடங்கல், நில வரைபடம். குடும்ப அட்டை நகல், மண் மற்றும் நீர் ஆய்வு அறிக்கை, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், சிறு குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி அலுவலர்கள் நவநீதகிருஷ்ணன், கார்த்கதி ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுபகிறது. மேலும் புதிதாக நுண்ணீர் பாசனம் அமைக்க உள்ள விவசாபிகளுக்கு துணை நீர் மேலான்மை திட்டத்தின் கீழ் ர்க் யின் பைப் லைக் அமைக்க அதிகபட்ச மானியமாக ரூ.10 ஆயிரம், புதியதாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் கிணறு அல்லது போர்வெல்லில் மின்மோட்டார் பொருத்திக் கொள்ள ரூ.15 ஆயிரம் மற்றும் பாசன

Tags:    

Similar News