லாரியிலிருந்து தவறி விழுந்து டிரைவர் பலி

தூத்துக்குடியில் லாரியிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2024-06-01 07:34 GMT

பைல் படம்

திண்டிவனம் அருகேயுள்ள காரச்சேரியைச் சேர்ந்தவர் தங்கப்பன் மகன் சரவணன் (47), லாரி டிரைவர். இவர் லாரியில் சரரக்குகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி கல்லூரி நகர் அருகே லாரியை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். பின்னர் அவர் லாரியில் ஏறும்போது கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) ராமலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News