கும்மிடிப்பூண்டியில் மயங்கி விழுந்த டிரைவர் பலி

திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்ற்சாலையில் இரும்பு ஏற்ற சென்ற டிரைவர் மயங்கி விழுந்து மாரடைப்பால் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-06 07:12 GMT
பலி
திருச்சி அடுத்த மனப்பாறை அருகே கூடத்திபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 39. லாரி டிரைவர். இரும்பு லோடு ஏற்றுவதற்காக, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலைக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு, குளியல் அறையில் மயங்கி விழந்த நிலையில் இறந்து கிடந்தார். மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News