ஒட்டன்சத்திரம் அருகே பாலியல் வழக்கில் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை

ஒட்டன்சத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம்தீா்ப்பளித்து உள்ளது.

Update: 2024-06-15 10:40 GMT

கோப்பு படம் 

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த கொத்தையம் பகுதியைச் சோ்ந்தவா் செல்லத்துரை (29). வாகன ஓட்டுநராக பணிபுரிந்த இவா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா் தனது உறவினா் மகளான 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்பேரில் கள்ளிமந்தையம் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து செல்லத்துரையை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி வேல்முருகன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், குற்றஞ்சாட்டப்பட்ட செல்லத்துரைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்தாா்.

Tags:    

Similar News