வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை குறைவு

வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை குறைவு 300 கிலோ மல்லிகை பூ வரத்து வந்த நிலையில் கிலோ ரூபாய் 800 க்கு விற்பனை.

Update: 2024-02-07 06:56 GMT

வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை குறைவு

திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டிற்கு நிலக்கோட்டை, செம்பட்டி ,வெள்ளோடு, மயிலாப்பூர், ரெட்டியார்சத்திரம் , ஜம்புளியம்பட்டி , ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் அதிகளவு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் தற்போது பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளதால்,மேலும் விசேஷ தினங்கள் இல்லாததால் பூ மார்க்கெட்டில் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் வியாபாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 300 கிலோ மல்லிகை பூ வரத்து வந்த நிலையில் கிலோ ரூபாய் 800 க்கு விற்கப்பட்டது. வருகிற வெள்ளிக்கிழமை தை அமாவாசையை முன்னிட்டு பூக்கள் விலை உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News