உரிய ஆவணம் இல்லாததால் ரூ. 1.06 லட்சம் பறிமுதல்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 1,06,500 ஐ, தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-26 03:10 GMT
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்துறை முதல் அரியலூர் செல்லும் சாலையில் கட்டையன் குடிக்காடு மெயின்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மார்ச் 25ஆம் தேதி இரவு 8 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அப்போது அங்கு வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, திருச்சி எஸ் எஸ் வளாகம் பகுதியை சேர்ந்த மபத்லால் மகன் குமலேஷ் வயது 33, என்பவர் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ 1,06,500 ரூபாயை குன்னம் இளவரசு, வட்ட வழங்கல் அலுவலர் ஆரோக்கியராஜ், , காவலர்கள் சத்யா செல்வகுமார் ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படை குழுவினரால் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றிய பணத்தை குன்னம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News