மந்தமாக நடைபெறும் பணிகள் - நடவடிக்க எடுக்க கோரிக்கை

தேவகோட்டை ரஸ்தா ரயில்வே ஸ்டேஷனில் பணிகள் மந்தமாக நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது

Update: 2024-07-04 06:34 GMT

மந்தமாக நடைபெறும் பணிகள்

தேவகோட்டை, காரைக்குடி அலுவலக பணிக்கு செல்வோர், பயணிகள் என நுாற்றுக்கணக்கானவர்கள் தேவகோட்டை ரஸ்தா ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி செல்கின்றனர். இந்த ரயில்வே ஸ்டேஷனில் அம்ரூத் திட்டத்தின் கீழ் மேற்கூரை, சுற்றுச்சுவர் அமைத்தல், புதிய பிளாட்பாரம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு மந்த கதியில் பணிகள் நடப்பதால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மணல் குவியலாக கிடப்பதால், பயணிகள் ரயிலில் ஏற முடியாமல் தவிக்கின்றனர். இங்கு வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News