மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-21 02:49 GMT
கடையநல்லூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்தின் மின் பயனீட்டாளர்களுக்கு குறை தீர்க்கும் முகாம் கடையநல்லூரில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கி பொதுமக்கள் அளித்த புகார்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க சம்பந்தப்பட்ட மின் பொறியாளர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் ஏராளமான மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News