கரூரில் அதிகாலையில் பைக் மோதல்: முதியவர் படுகாயம்

கரூரில் அதிகாலையில் பைக் மோதியதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-04-30 12:26 GMT

காவல் நிலையம்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, செங்குந்தபுரம் அருகே உள்ள ரெங்கநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் கவுண்டர் வயது 87. இவர் ஏப்ரல் 28ஆம் தேதி அதிகாலை 5:30- மணி அளவில், கரூர் - கோவை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள டிபன் சென்டர் எதிரே நடந்து சென்ற போது, அதே சாலையில் வேகமாக வந்த, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், கிழக்கு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசாமி வயது 29 என்பவர் ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற நடேசன் கவுண்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து அவருக்கு தலை, இடது கண், வலது இடது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து நடேசன் கவுண்டர் பேரன் பொன் கார்த்திக் வயது 30 என்பவர் அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஹரிஹர சுவாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags:    

Similar News