அதிமுக நிர்வாகி மறைவிற்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

மேட்டூரில் அதிமுக., நிர்வாகி மறைவிற்கு எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Update: 2024-01-06 07:56 GMT

சேலம் மாவட்டம்,மேட்டூர் அருகே நங்கவள்ளியை சேர்ந்தவர் சேர்ந்தவர் என். பாலசுப்பிரமணியன் (57). இவர் அதிமுகவில் சேலம் புறநகர் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் பதவி வகித்து வந்தார். இவரது மனைவி பானுமதி நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவராக உள்ளார். பாலசுப்பிரமணியன் நேற்று கோவை சென்று விட்டு காரில் திரும்பி வரும் வழியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து அவரது உடல் நங்கவள்ளியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி நேரில் சென்று பாலசுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன், ஓமலூர் தொகுதி எம்எல்ஏ மணி, ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ நல்லதம்பி, மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் , சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர். இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், சேலம் புறநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் லலிதா சரவணன், கலங்கவல்லி வடக்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News