முதியவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை
சங்கரன்கோவில் அருகே முதியவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்ததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-14 06:15 GMT
முதியவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் சிங்கிலிபட்டி கிராமத்தை சேர்ந்த துரைப்பாண்டி இவர் மாட்டு வியாபாரி தொழில் செய்து வந்தார், இவருக்கு மன உளைச்சல் காரணமாக வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார், தகவல் அறிந்த சின்ன கோவிலாங்குளம் போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.