டூவீலரில் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம் !

டூவீலரில் சென்ற முதியவர். அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-03-06 11:38 GMT

காவல்துறை

டூவீலரில் சென்ற முதியவர். அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. கரூர் மாவட்டம், வாங்கல், கீழ சக்கர பாளையம் பகுதியை சேர்ந்தவர் எலும்பன் வயது 65. இவர், மார்ச் 2-ம் தேதி மாலை 5:30- மணி அளவில், கரூர்- வாங்கல் செல்லும் சாலையில் அவரது டி வி எஸ், எக்ஸ் எல் வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அதே சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, பாளையம் பிரிவு அருகே வேகமாக சென்று எலும்பன் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.அதே சமயம் மோதிய வாகனம் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.காவல்துறை வழக்கு பதிவு. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த எலும்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பி எம் பெஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த அவரது உறவினர், திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை சேர்ந்த, லோகாம்பாள் வயது 36 என்பவர் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், விபத்து ஏற்படும் வகையில், டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? அந்த வாகனத்தின் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.
Tags:    

Similar News