இரும்பாலை அருகே கார் மோதி முதியவர் பலி

இரும்பாலை அருகே கார் மோதி விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

Update: 2024-05-30 06:00 GMT
பைல் படம்
சேலம் இரும்பாலை அருகில் கீரைபாப்பம்பாடி பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 64). இவர், நேற்று தாரமங்கலத்தில் இருந்து மாரமங்கலத்துப்பட்டி கங்கைநகர் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த போது பின்னால் வந்த கார், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கருப்பண்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து தொடர்பாக இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News