தனியார் பஸ் மோதி முதியவர் பலி
செய்யாறு அருகே தனியார் பஸ் மோதி முதியவர் பலி ஆன நிலையில் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.;
Update: 2024-01-19 08:31 GMT
தனியார் பஸ் மோதி முதியவர் பலி
செய்யாறு அருகே தனியார் கம்பெனி பஸ் மோதியதில் மொபட்டில் சென்ற முதியவர் பலியானார். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா திருப்பனங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பன் (62) இவர் கோளிவாக்கம் கிராமத்திற்கு சென்று மீண்டும் வீட்டிற்கு தனது மொபட்டில் வீடு திரும்பினார். அப்போது காஞ்சிபுரம் கலவை சாலையில் வெள்ளாகுளம் கூட்ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த தனியார் கம்பெனி பஸ் மோதியது.அதில் தூக்கி விசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர்மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செல்லப்பன் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து அவரது மகன் கேசவன் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.