வள்ளியூரில் முதியவர் மாயம் - போலீசார் தேடல்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கீழத்தெருவை சேர்ந்த முதியவரை மாயமானதையடுத்து போலீசார் தேடி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-15 05:54 GMT
முதியவர் மாயம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கீழத்தெருவை சேர்ந்த முதியவர் கணபதி நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் காணவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் வள்ளியூர் காவல் நிலையத்தில் இன்று (மார்ச் 15) புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து வள்ளியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன முதியவர் கணபதியை தேடி வருகின்றனர்.