ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் புறக்கணிக்கப்பு: விவசாயிகள் கூட்டமைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Update: 2024-04-06 11:35 GMT

தேர்தல் புறகணிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று பேட்டி அளித்த அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் முத்தையா வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது மேகமலை தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

இங்கு சாம்பல் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் இயங்கி வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு பகுதியில் பேச்சியம்மன் கோவில் மற்றும் காட்டழகர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களும் அமைந்துள்ளது.

மேலும் இந்த வனப்பகுதியில் சில விவசாய பட்டா நிலங்களும் அமைய பெற்றுள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக செண்பகத்தோப்பு வனப்பகுதிக்குள் நுழையும் நபர்களுக்கு சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இது குறித்து இப்பகுதியில் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் மற்றும் பக்தர்கள் பலமுறை மாவட்ட ஆட்சி தலைவரிடம் முறையிட்டு தங்களின் வாழ்வாதாரம் மற்றும் தெய்வ வழிபாட்டு உரிமை பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். இப்பிரச்சினை தொடர்பாக பல்வேறு சமரச கூட்டங்கள் நடத்தப்பட்டு இது தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. இருந்தபோதிலும் இங்கு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நுழைவுத் தடுப்பு அகற்றப்படாமல் தொடர்ந்து செண்பகத் தோப்புக்குள் நுழையும் விவசாயிகள் மற்றும் மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து தற்போது இப்பகுதியைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் மற்றும் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பினர் வனத்துறையினரின் இந்த அத்து மீறிய செயலால் விவசாயிகளான தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கோவிலுக்கு செல்லும் மக்களிடம் சுமார் 20 ரூபாய் வரை வசூல் செய்வதால் அவர்களின் வழிபடும் உரிமையும் பறிக்கப்படுகிறது என்றும் ஆகையால் முறைகேடாக அமைக்கப்பட்ட நுழைவு தடுப்பை அகற்றி உரிய நடவடிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின்ரான தாங்கள் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.

வனத்துறை ஆத்து மீறி வசூல் செய்வது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் பலமுறை கண்டனம் தெரிவித்ததும், ஆண்டாள் கோவில் சடகோப ராமானுஜ ஜீயர் கண்டனம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News