ஜூன் 30க்குள் தேர்தல் செலவின கணக்கை தாக்கல் செய்யவேண்டும் - ஆட்சியர்

2024 நாடாளுமன்ற தேர்தலில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வரும் 30 ஆம் தேதிக்குள் செலவீன கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-06-28 07:22 GMT

ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி ஜாம் பாக்கிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் – 2024 இல்                     29, நாகப்பட்டினம்  பாராளுமன்றத் தொகுதி (தனி), போட்டியிட்ட அனைத்து  வேட்பாளர்களும் தனது தேர்தல் செலவினக் கணக்குகளை மாவட்ட  தேர்தல் அலுவலரிடம்  தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 ஆம் நாளுக்குள் ஒப்படைக்க வேண்டும்.

Advertisement

அதற்கான தேர்தல் செலவு கணக்குகள் ஒத்திசைவு கூட்டம்  எதிர்வரும் 30.06.2024  அன்று காலை 10:00 மணியளவில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில்  நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை   அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது என்றும் வேட்பாளர்கள் ,முகவர்கள் கடந்த 26.06.2024 அன்று  நடைபெற்ற தேர்தல் செலவின கணக்குகள் தாக்கல் செய்வதற்கான  பயிற்சிக்கூட்டத்தில்  தெரிவித்துள்ளவாறு   உரிய ஆவணங்களுடன்  தேர்தல் செலவின ஒத்திசைவு கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு  தேர்தல் நடத்தும்  அலுவலர்   மற்றும் மாவட்ட  ஆட்சித்தலைவர்  ஜானிடாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News