பைக்கில் இருந்து விழுந்த எலக்ட்ரீசியன் பலி!

விராலிமலை அருகே பைக்கில் இருந்து விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.

Update: 2024-02-28 05:11 GMT

மாத்துார் போலீசார் வழக்கு

விராலிமலை ஒன்றியம் முத்து கிருஷ்ணம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). இவரும், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரும் திருச்சியில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இருவரும் பைக்கில் திருச்சி சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.விராலிமலை கீரனூர் சாலையில் ஆலங்குளம் அருகே வந்தபோது சாலையில் இருந்த பள்ளத்தில் பைக் வேகமாக இறங்கியதில் பின்னால் அமர்ந்திருந்த ராஜேந்திரன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து மாத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News