"யானைக்கால் நோய் விழிப்புணர்வு முகாம்"

மானாம்பதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், யானைக்கால் நோயாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது

Update: 2024-03-27 02:33 GMT

விழிப்புணர்வு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், யானைக்கால் நோயாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உமாதேவி தலைமை வகித்தார். மாவட்ட மலேரியா அலுவலர் டாக்டர் மணிவர்மா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், முகாமை துவக்கி வைத்து, யானைக்கால் நோயை தடுப்பது, சிகிச்சை பெறுவது என விளக்கம் அளிக்கப்பட்டது. நோயினால் ஏற்படும் காயங்களுக்கு மருந்து வழங்கப்பட்டது.
Tags:    

Similar News