ஆசனூர் அருகே அரசுப்பள்ளி சுற்றுசுவரை இடித்து தள்ளிய யானைகள்

ஆசனூர் அருகே அரசுப்பள்ளி சுற்றுசுவரை காட்டு யானைகள் இடித்து தள்ளியதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2024-05-31 08:54 GMT

காட்டு யானை (பைல் படம்)

 ஆசனுார் அருகே உகினியம் மலை கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள், பள்ளி சுற்றுச்சுவரை இடித்து தள்ளின. மேலும் கழிப்பறை கதவு, மெயின் கதவு என பல இடங்களில் சேதமாகி உள்ளது. இதனால் மலை கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
Tags:    

Similar News