ஈரோடு வேலைவாயப்பு வாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு வேலைவாயப்பு வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-05 16:12 GMT

மாவட்ட ஆட்சியர் 

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் துறை வேலை அளிப்பவர்கள் (Employes) கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான எழுதப்படிக்க தெரிந்த நபர்கள் முதல் பட்டப்படிப்பு படித்த நபர்கள் வரை மற்றும் டெய்லர்கள், கணினி இயக்குபவர்கள், தட்டச்சர்கள், ஓட்டுநர்கள் போன்ற பணிகளுக்கு தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்து தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும், திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்துகொண்டு திறன் பயிற்சிக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகின்றனர். எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார்துறையில் பணிபுரிய ஆர்யமாக உள்ள அனைவரும் www.niejobto vin என்ற தமிழ்நாடு அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையத்தின் வழி

வேலைநாடுநர்களுக்கான பதிவு செய்து கொண்டு இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News