ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு

வத்தலகுண்டு அருகே முத்துலாபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் ராணுவத்தில் சேவை புரிந்த நிலையில், சொந்த ஊர் திரும்பிய அவருக்கு ஊர்மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2024-01-04 07:11 GMT
வத்தலகுண்டு அருகே முத்துலாபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து, 28 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் தனது, 28 ஆண்டுகால இந்திய ராணுவ பணியை முடித்துக் கொண்டு, சொந்த ஊரான முத்துலாபுரத்திற்கு வந்தார். அவரை, பெற்றோர், உறவினர்கள், ஊர் பொதுமக்கள் (ம) உள்ளிட்ட அனைவரும், ஊர் எல்லையில் இருந்து வான வேடிக்கையுடன் வரவேற்றனர்.
Tags:    

Similar News