ஈ.வி.எம். இயந்திரங்களை பார்வையிட்ட ஈரோடு கலெக்டர்

குமாரபாளையத்தில் ஈ.வி.எம்.இயந்திரஙகளை ஈரோடு கலெக்டர் பார்வையிட்டார்.

Update: 2024-03-24 09:45 GMT

ஈரோடு ஆட்சியர் ஆய்வு 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஈ.வி.எம். மெசின்களை ஈரோடு கலெக்டர் பார்வையிட்டார். ஈரோடு லோக்சபா தொகுதியில் நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர குமாரபாளையம் தொகுதியும் அடங்கும். குமாரபாளையம், பள்ளிபாளையம் இரு நகராட்சிகளை கொண்ட குமாரபாளையம் தொகுதியில் லோக்சபா தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சியினர் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் ஆங்காங்கே தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். ஈரோடு தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் தொகுதியில், தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரம் விநியோகம், ஓட்டு போட அத்தாட்சி சீட்டு  வழங்குவதற்கான பணிகள்,

ஆகியன செயல்படுத்தி வருகிறார்கள். நேற்று குமாரபாளையம் தொகுதியில் ஓட்டுக்கள் பதிவு செய்யக்கூடிய ஈ.வி.எம். மெசின்கள், குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதனை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் வந்து,மெசின்கள் வைக்கப்பட்ட அறைகளை பார்வையிட்டு, பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். தாசில்தார் சண்முகவேல், தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் உள்பட பலர் உடனிருந்தனர். தாசில்தார் சண்முகவேல் கூறியதாவது,

குமாரபாளையம் தொகுதியில் 279 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில் தேர்தல் சமயத்தில் பயன்படுத்த கண்ட்ரோல் யூனிட் 334, பேலட் மெசின் 334, வி.வி.பேடு  362, பாதுகாப்பு அறையில், மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News