முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் - நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருப்பூர் அங்கேரிபாளையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-02-26 07:15 GMT

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் வடக்கு தொகுதி சார்பில் திருப்பூர் ஒன்றிய செயலாளரும், திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான விஜயகுமார்  தலைமையில், அங்கேரிபாளையத்தில் பொது கூட்டம் மற்றும் 7600 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் அதிமுக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., பங்கேற்று சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் முன்னாள் அமைச்சரும், பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான MSM.ஆனந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், சிவசாமி, பழனிச்சாமி, நடராஜன், உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 

இதைத்தொடர்ந்து  நடைபெற்ற கபடி விளையாட்டு போட்டி வீரர்களுக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொரடவுமான எஸ்பி வேலுமணி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

எஸ்.பி.வேலுமணி பேசிய பொழுது, தமிழ்நாட்டு மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவி, பெண்களுக்காக அற்புதமான திட்டங்கள் தந்த அம்மவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், சிறப்பான கபடி போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ,உருவாக்கினார்  புரட்சித்தலைவி அம்மா இந்த கழகத்தை ஒன்றரை கோடி உறுப்பினர்களாக வளர்த்தார்கள். அம்மா அவர்கள் எங்களை எல்லாம் வளர்த்துவிட்டு தன்னை பற்றி கவலைப்படவில்லை. அம்மா அவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் பார்த்திருந்தால் இன்னும் இருந்திருப்பார். ஆனால் எங்களை வளர்த்து விட்டார். இன்று அவர் இல்லை. தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்து அம்மா அவர்கள் தான். உரிமைக்காக போராடியவர் புரட்சித்தலைவி அம்மா. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் எவ்வளவு பிரச்சினைகளை தாண்டி இந்த கழகத்தை வளர்த்திருக்கிறார் அம்மா. அம்மாவின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் நானே இரத்தம் கொடுப்பேன். நம்மை உருவாக்கியவர் அம்மா அவர்கள் தான். நிறைய பேருக்கு வாய்ப்புகளை வழங்கியவர் அம்மா அவர்கள் தான்.

சாதரணமாக இருந்த அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கியவர் அம்மா அவர்கள் தான். நாங்கள் எல்லாம் கழகம் ஆரம்பித்த போது முதல் பல்வேறு காலங்களில் கழகத்தில் இணைந்த சாதாரண தொண்டர்கள். எங்களுக்கு அம்மா அவர்கள் பதவிகள் கொடுத்தார். ஏழை எளிய மக்களுக்கு நல்ல திட்டங்கள் தந்தவர் அம்மா. தாலிக்கு தங்கம் தந்தவர் அம்மா. குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் தந்தார். ஆடு மாடு கோழி தந்தார். இப்படி எண்ணற்ற திட்டங்களை தந்தவர் அம்மா. பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர் அம்மா. தமிழ்நாட்டின் உரிமை பிரச்சினைகளை குரல் கொடுத்து சரி செய்தவர் அம்மா தான். காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க காரணமானவர் அம்மா தான். உரிமையோடு கண்டிப்பவர் அம்மா அவர்கள் தான். அவரை பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம்.

சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக அம்மா என்னை நியமித்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தினார். மிக்ஸி, பேன், கிரைண்டர் மற்றும் லேப் டாப் எல்லாம் இந்த துறை மூலம் தான் வழங்கினார்கள். பொருட்கள் எல்லாம் அம்மா அவர்களே பார்வையிட்டு வழங்க செய்தார். தானே பார்வையிட்டு மிக்ஸியில் சின்ன ஜார் வழங்க வேண்டும் என்று கூறினார். லேப் டாப்பில் சின்னஞ்சிறு குழந்தைகள் கெட்டுப் போகாமல் இருக்க தேவையானவற்றை மட்டும் வைக்கக சொன்னார்கள். இப்படி பார்த்து பார்த்து பல திட்டங்களை செய்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அம்மா அவர்களுக்கு பிறகு அம்மா அவர்களின் திட்டங்களை எடப்பாடியார் தொடர்ந்தார். மடிக்கணினி முதல் விலையில்லா கறவை மாடுகள் உள்ளிட்ட திட்டங்களை அம்மா அவர்கள் தந்த திட்டங்களை தொடர செய்தவர் எடப்பாடியார். இன்றைக்கு அந்த திட்டங்களை தந்து அம்மா அவர்களின் ஆட்சியை நாலரை ஆண்டுகள் தொடர செய்தவர் எடப்பாடியார். இன்றைக்கும் முக ஸ்டாலின் திறந்து வைக்கக் கூடிய திட்டங்கள் எல்லாம் எடப்பாடியார் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்த திட்டங்கள் தான்.

இன்றைக்கு முக ஸ்டாலின் நீட்டை ஒழிப்போம் என்று கூறி வருகிறார். நீட் ஒழிக்க வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை. அதனால் நீட் பயிற்சி மையங்களை கொண்டு வந்தவர் எட்பபாடியார். இன்றைக்கு திமுக மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டு இருக்கிறது. எடப்பாடியார் தான் திட்ட்டங்களை கொண்டு வந்தவர் . அவினாசி அத்துக்கடவு திட்டம் , நான்காவது குடிநீர் திட்டம், புதிய பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் என எல்லா திட்டங்களையும் ஒதுக்கி தந்தவர் எடப்படியார் தான். 50 ஆண்டுகால வளர்ச்சியை ஏற்படுத்தி தந்தவர் எடப்பாடியார் தான். அன்றைக்கு சாய தொழிலுக்கு 200 கோடி அம்மா தந்தார். இன்றைக்கு திமுக பீக் ஹவர் கட்டணத்தை அமல்படுத்தி சிரமத்தை கொடுக்கிறார்கள்.

இன்றைக்கு எம்.பிக்கள் எங்கும் பார்க்க முடியவில்லை. மகளிருக்கு 1000 ரூபாய் அனைவருக்கும் தரவில்லை. இதற்கு அதிமுகவினர் தான் போராடுகிறோம். எடப்பாடியார் தான் பொங்கலுக்கு 2500 ரூபாய் தந்தார். 3 ஆண்டுகள் ஆகியும் திமுக எதுவும் தரவில்லை. இப்போது தேர்தலுக்கு வருவார்கள். ஏற்கனவே 38 எம். பி., ஜெயிச்சும் தண்டமாக இருக்கிறார்கள். இந்த தொகுதியில் எடப்பாடியார் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் இரட்டை இலை சின்னத்துக்கு நீங்கள் வாக்களிக்க. வேண்டும். சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சரி நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். மீண்டும் எடப்பாடியார் முதல்வர் ஆவார். எல்லோரும் இரட்டை இல்லை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

Tags:    

Similar News