புதுக்கோட்டை: பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்

கொரோனா காலத்தில் தடுப்பூசி நமக்கு துணை நின்றன தடுப்பூசி குறித்து தற்போது வரும் தகவல்களால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2024-05-08 16:06 GMT

அமைச்சர் பேட்டி

  புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக சார்பில் புதுக்கோட்டையில் 30 இடங்களில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக ஒரு இடத்தில் ஐஸ்கிரீம் பந்தல் திறக்கப்பட்டுள்ளது தினமும் ஆயிரம் பேருக்கு விதவிதமான ஐஸ்கிரீம்கள் வழங்கப்பட்டு வருகின்றன.   கொரோனா தடுப்பு மருந்துகள் எல்லாம் இக்கட்டான கால கட்டத்தில் நமக்கு துணை நின்றன.இந்த தடுப்பூசிகள் 10 லட்சம் பேருக்கு ஒருவருக்கு அரிதாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கூறியுள்ளனர்.

இப்போது வரும் தகவல்களால் கொரோனா தடுப்பூசி குறித்து பெரிய அளவில் அச்சபட தேவையில்லை, எனினும் வல்லுநர் குழுவினர் இன்னும் கூடுதலான ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் சந்தேகத்தை போக்க வேண்டும்"  என்றார்

Tags:    

Similar News