மஞ்சள் நீர் ஊற்றி விளையாடி நடனமாடிய முன்னாள் அமைச்சர்!

கோவை ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவில் மஞ்சள் நீர் ஊற்றி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடனமாடினார்.

Update: 2024-05-22 11:07 GMT
கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கரகம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.மேலும் தேர் பவனி இன்று நடைபெற்ற நிலையில் இதனை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.பின்னர் ஊர்வலமாக பக்தர்களுடன் வந்தவர் மஞ்சள் நீராடியதுடன் ஜமாப் இசைக்கேற்ப நடனமாடினார்.பி.கே.புதூர், கோவைபுதூர் பிரிவு, பாலக்காடு பிராதன சாலைவழியாக ஊர்வலமாக சென்றது. மேலும் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பால்குடம், முளைப்பாரிகள்,பூ சட்டிகள் எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர்.மேலும் இளைஞர்களின் சிலம்பாட்டம்,வான வேடிக்கை என திருவிழா களைகட்டியது.
Tags:    

Similar News