திரவ உயிர் உரங்களின் கண்காட்சி

தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள் திரவ உயிர் உரங்களின் கண்காட்சியை நடத்தினர்.

Update: 2024-05-15 10:09 GMT

தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள் திரவ உயிர் உரங்களின் கண்காட்சியை நடத்தினர்.


கிராமப்புற வேளாண்மைப் பணியில், ஈச்சங்கோட்டை முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மாணவிகள் ஈடுபட்டுள்ளனர். இதனொரு பகுதியாக, திருவையாறு அருகே பசுபதிகோயிலில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கிராம வள மையத்தில், வேளாண்மை கல்லூரி மாணவிகள் திரவ உயிர் உரங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இந்நிகழ்வில் திரவ உயிர் உரங்கள் பயன்படுத்தும் முறையை பற்றிய செயல் விளக்க பணியில் ஈடுபட்டனர். இது மட்டுமன்றி அதிக பயன்பாட்டில் இருக்கும் சில திரவ உயிர் உரங்கள் அடங்கிய கண்காட்சியையும் மாணவிகள் நடத்தினர். இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.
Tags:    

Similar News