ஆட்சியர் தங்கவேல் தலைமையில் சாதனை விளக்க கண்காட்சி !

கரூரில்,தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க கண்காட்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-07-05 07:09 GMT

கண்காட்சி

கரூரில்,தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க கண்காட்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் தமிழக அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் தமிழக அரசில் உள்ள 27 துறைகளில் தமிழக அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டு காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் குறித்து புகைப்படங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து, அரங்கினில் அமைக்கப்பட்டு இருந்த பல்வேறு புகைப்படங்களை அனைவரும் பார்வையிட்டு, அது குறித்து தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
Tags:    

Similar News