திருப்பத்தூரில் வெடிகுண்டு பிரிவினர் தீவிர சோதனை!

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வெடிகுண்டு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர்.

Update: 2024-03-14 02:25 GMT

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்திற்கும் கலெக்டர் அலுவலகத்திற்கும் வெடிகுண்டு வைத்துள்ளதாக கடிதத்தின் எதிரொலி! திருப்பத்தூர் மாவட்ட வெடிகுண்டு பிரிவினர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் இருந்து மோப்பநாய் பிரிவும் இணைந்து தீவிர சோதனை! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேற்று தபால் மூலம் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கடிதம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ராஜாவை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்க்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அது கடிதத்தை நான் அனுப்பவில்லை மேலும் இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று விசாரணையில் தெரிவித்துள்ளார் இதன் காரணமாக கடிதத்தை அனுப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் அந்த கடிதத்தின் எதிரொலியாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட வெடிகுண்டு பிரிவு நிபுணர் காவல் உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் தலைமையில் வேலூர் மாவட்டத்திலிருந்து மோப்பநாய் பிரிவின் கீழ் ரீட்டா என்ற மோப்ப நாயும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏதேனும் வெடிகுண்டு ஏதேனும் வைக்கப்பட்டுள்ளதா என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News