வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-04 07:56 GMT

கண் பரிசோதனை முகாம்

மயிலாடுதுறை வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் மாயூரம் வழக்கறிஞர் சங்கம் இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம் மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. முகாமை மயிலாடுதுறை மாவட்ட நீதிபதி பி. ராஜவேலு, துவக்கி வைத்தார், மாயூரம் வழக்கறிஞர் சங்க தலைவர் ஜெகதராஜ் செயலாளர் பாரி மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் வழக்கிற்காக வந்திருந்த பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் இம்முகாமில் கலந்து கொண்டனர்.

கும்பகோணம் அகர்வால் மருத்துவமனை சார்பில் மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் சோதனை செய்தனர். பரிசோதனைக்குப் பிறகு கண் கண்ணாடிக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஒரே கண்ணாடியில் கிட்ட பார்வை, எட்டப்பார்வை, படிப்பதற்கான அனைத்து அம்சங்களும் உள்ள கண்ணாடியும் வழங்கினர்.

Tags:    

Similar News