குடும்ப பிரச்சனை: கிணற்றில் குதித்து பெண் தற்கொலை!!

தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-03-07 07:17 GMT
பலி
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகே உள்ள எத்திலப்பன் நாயக்கன்பட்டி கிராமம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சங்கரவடிவேல் மனைவி தனலட்சுமி (46). இவர் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று அங்குள்ள பிள்ளையார் கோவில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News