உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு நினைவு தினம்

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு 39 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்க அழைப்பு.

Update: 2023-12-19 14:59 GMT

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு 39 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்க அழைப்பு.

கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் கோயில்பாளையம் அருகே உள்ள வைய்யம்பாளையம் கிராமத்தில் 21.12.2023 வியாழக்கிழமை மறைந்த உழவர் பெருந்தலைவர் C.நாராயணசாமி நாயுடு, உழவர் போராளி அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவு தினம் அணுசரிக்கப்படவுள்ளது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் சிதறிக் கிடந்த நெல்லிக்காயை போன்று இருந்த விவசாயிகளை ஒருங்கினைத்து தமிழக விவசாயிகள் சங்கத்தை உருவாக்கி 1970 முதல் 1980 வரை பல கட்டங்களில் தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் மூலம் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்து தமிழக விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் மற்றும் விவசாயிகள் பம்பு செட்டுக்கு மின் கட்டணம் கட்டுவதை குறைக்க வழிவகை செய்தும் மற்றும் தற்போது விவசாயிகள் பயன்படுத்தி வரும் 20 லட்சம் கிணற்று மோட்டார் பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க வழிவகை செய்தும் தந்தவர், மறைந்த உழவர் பெருந்தலைவர் C.நாராயணசாமி நாயுடு 39 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் ஆர்.வேலுசாமி, தலைமையில் வருகின்ற 21.12.2023 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது அதுசமயம் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தவறாது உழவர் பெருந்தலைவர் C.நாராயணசாமி நாயுடு அவர்கள் மணி மண்டபத்திற்கு அஞ்சலி செலுத்த அனைவரும் வருக என அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

Similar News