விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.02.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

Update: 2024-02-23 15:57 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம்  

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.02.2024 காலை 10.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிப்ரவரி 23ஆம் தேதி தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News