உழவர் சந்தையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காட்பாடி உழவர் சந்தையில் தூய்மை பாரத இயக்கம் என்ற தலைப்பில் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
Update: 2024-07-04 17:41 GMT
விழிப்புணர்வு முகாம்
வேலூர் மாவட்டம் காட்பாடி உழவர் சந்தையில் தூய்மை பாரத இயக்கம் 2.0 தலைப்பில் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், வியாபாரிகளும், பொதுமக்களும் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தனித்தனியாக வழங்க வேண்டும். தெருக்களிலோ கால்வாய்களிலோ கானாறுகளிலோ குப்பைகளை கொட்டக்கூடாது.
வீடுகள் மற்றும் பொது இடங்களில் கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது நமது கடமை. இதனால் தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஷாம், சுகாதார மேற்பார்வையாளர் மதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.