திருமருகலில் விவசாயிகள் சங்கத்தினர் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்

திருமருகலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2024-02-24 04:16 GMT

திருமருகலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


திருமருகலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நாகை மாவட்டம் திருமருகல் பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.விவசாய சங்க ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ் முன்னிலை வகித்தார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு,மாவட்ட குழு உறுப்பினர் லெனின்,மாவட்ட பொருளாளர் பொன்மணி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினர்.

இதில் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டால் இளம் விவசாயி சுப்கரண்சிங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்,100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயம்,விவசாய மீது கொடும் தாக்குதல் நடத்தும் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடியுடன் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News