மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

பெரம்பலூர் பிளஸ் டூ படிக்கும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-14 15:11 GMT

பெரம்பலூர் பிளஸ் டூ படிக்கும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர். 

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரது தாயார் ஏற்கனவே இறந்து விட்டநிலையில், மாணவி யின் தந்தையான லாரி டிரைவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவி பெரம்பலூர் அனைத்து மக ளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட் டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News