மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது

வேலூர் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-07-04 17:33 GMT

பாலியல் தொல்லை 

வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 33 வயது கட்டிடக்கலை சிற்பி. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 9 வயதுடைய மூத்த மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடந்த ஓராண்டாக மூத்த மகளுக்கு அவ்வப்போது தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை தாயிடம் எதுவும் தெரிவிக்க கூடாது என்று மிரட்டி உள்ளார். இந்த நிலையில் பாலியல் தொல்லை அதிகமானதால் இதுகுறித்து அவர் கதறி அழுதபடி தாயிடம் கூறி உள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த தாய் இதுபற்றி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். இதனை அறிந்த தந்தை தலைமறைவானார். இந்த நிலையில் நேற்று அவர் குடியாத்தம் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று தந்தையை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Tags:    

Similar News