பிப்ரவரி 28 விசைத்தறி உரிமையாளர்கள் அடையாள வேலை நிறுத்தம்

தமிழகம் முழுவதும் ஜவுளி சங்கங்கள் வரும் 28ஆம் தேதி நடத்த ஒரு நாள் அடையாள முழு வேலைநிறுத்த போராட்டம்

Update: 2024-02-25 15:30 GMT

சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம்

விசைத்தறி மற்றும் ஜவுளி தொழிலை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள எம் எஸ் எம் இ 43 B (எச்)என்ற சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜவுளி சங்கங்கள் வரும் 28ஆம் தேதி நடத்த ஒரு நாள் அடையாள முழு வேலைநிறுத்த போராட்டத்திற்கு திருச்செங்கோடு வட்டார சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. வரும் 28 தேதி வட்டாரத்தில் உள்ள அனைத்து விசைத்தறிகளையும் நிறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News