பயணிகள் ஏற்றும் தகராறில் பெண் ஆட்டோ டிரைவர் கைது
கள்ளக்குறிச்சி அருகே பயணிகள் ஏற்றும் தகராறில் கத்தியை காட்டி மிரட்டிய பெண் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-04 06:59 GMT
காவல்துறை
கள்ளக்குறிச்சி அடுத்த ச.செல்லம்பட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி சிவகாமி, 40; ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் மாலை ஏமப்பேர் ஸ்டாண்டில் தனது ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றினார். அப்போது ஏமப்பேர் காலனியைச் சேர்ந்த அப்பகுதியின் ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்க தலைவர் வேலு, 52; இங்கு பயணிகளை ஏற்றக்கூடாது என தெரிவித்துள்ளார். இதனால், ஏற்பட்ட தகராறில் வேலுவை பெண் ஆட்டோ டிரைவர் சிவகாமி தாக்கி, ஆட்டோவில் வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். இது குறித்து வேலு அளித்த புகாரின் பேரில், சிவகாமி மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.