சேலத்தில் பெண் தற்கொலை

சேலம் செவ்வாய்பேட்டை அருகே வசித்த வசந்தி (44), திடீரென தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Update: 2024-04-04 04:30 GMT

பைல் படம்

சேலம் செவ்வாய்பேட்டை பஞ்சந்தாங்கி ஏரி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி வசந்தி (44), இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி நான் தற்கொலை செய்துகொள்வேன் என குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே வசந்தி உயிரிழந்தார். இதுபற்றி செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News