காய்ச்சல் பரிசோதனை முகாம்

திருப்பூர் தியாகி குமரன் காலனியில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Update: 2024-07-01 06:41 GMT

காய்ச்சல் பரிசோதனை முகாம் 

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பொதுசுகாதாரத்தை பேணும் வகையில் மாநகராட்சி சார்பில் 4 மண்டலங்களிலும் சுழற்சி முறையில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. தற்போது மழை மற்றும் வெயில் என பருவநிலை மாறி மாறி இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புகளை சந்திக்கிறார்கள். இதனால் பொதுமக்களின் வசதிக்காக தினமும் ஒவ்வொரு பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் தியாகி குமரன்காலனி பகுதியில் மாநகராட்சி டாக்டர் கலைச்செல்வன் தலைமையில் முகாம் நடந்தது. இதில் 117 பொதுமக்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. காய்ச்சல் பாதிப்பு இருந்தவர்களுக்கு மாத்திரை, மருந்துகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News