முதலீட்டாளருடனான கள நிகழ்வு கூட்டம் - அமைச்சர்கள் துவக்கி வைப்பு

Update: 2023-12-17 01:12 GMT

கள நிகழ்வு கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் திருமுருகன் பூண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான முதலீட்டாளர்களுடன் அரசு கள நிகழ்வு கூட்டத்தினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மற்றும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு தொழில் கடன் ஒப்புதல், ஆணைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் தென்னிந்திய பொறுப்பாளர் ஆயத்த ஆடை ஏற்றுமதி கழகத்தின் தலைவர் சக்திவேல், மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் ராமலிங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கே .எம்.சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News