டிராக்டர் விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி

கடையத்தில் டிராக்டர் விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

Update: 2024-05-04 04:58 GMT

கடையத்தில் டிராக்டர் விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.


தென்காசி மாவட்டம் கடையம் வடக்கு ஒன்றியம் கடையம் பெரும்பத்து ஊராட்சி கானாவூர் சேர்ந்த கடல் மணி என்பவர் டிராக்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் சென்ற திமுக நிர்வாகிகள் கடல் மணி குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார் . இந்த நிகழ்ச்சியில் திமுக கட்சியின் கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News