சங்க காலப் பானை, முனைக்கருவிகள் கண்டெடுப்பு

சிவகங்கை அருகே சங்க காலப் பானை, முனைக்கருவிகளை தொல்பொருள் ஆராய்ச்சி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

Update: 2024-07-01 14:21 GMT

சிவகங்கை அருகே சங்க காலப் பானை, முனைக்கருவிகளை தொல்பொருள் ஆராய்ச்சி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.


சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர் புலவர் காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன், உறுப்பினர் காளீஸ்வரன் ஆகியோர் காளையார் கோயில் பாண்டியன் கோட்டை பகுதியில் இன்று மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டதில் பானை குறியீடுகள், கீறல்கள், எலும்பாலான முனைக்கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சங்க காலத்தை சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News