உணவகத்தில் தீ விபத்து- விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்

ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் பகுதியில் உள்ள வீதி உணவகத்தில் தீ விபத்து.

Update: 2023-11-29 01:59 GMT

கடையில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பொள்ளாச்சி:ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோயில் உள்ளது. இங்கு தினசரி உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.மாசாணி அம்மன் கோயில் செல்லும் வழியில் பூக்கடை மற்றும் உணவு கடைகள் அதிக அளவில் உள்ளது.  சிவக்குமார் (54) என்ற நபர் மாசாணி அம்மன் கோயில் செல்லும் வழியில் உணவு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் இன்று வழக்கம்போல் உணவு தயார் செய்வதற்காக கேஸ் அடுப்பை பற்றவைத்த பொழுது எதிர்பாராத விதமாக கேஸ் கசிந்து தீப்பற்றி எறிய தொடங்கியது.சுதாரித்துக் கொண்ட சிவகுமார் அங்கிருந்து வெளியே வந்து உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதனால் கோவில் அருகே பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 
Tags:    

Similar News