தென்னை மரத்தில் இடி விழுந்து தீ விபத்து !

நத்தம் நாட்டாண்மைகாரர் தெருவில் திங்கட்கிழமை இரவு இடி விழுந்து தென்னை மரத்தில் தீ பற்றி எரிந்தது. நத்தம் தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

Update: 2024-06-19 06:37 GMT

தென்னை

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நாட்டாண்மைகாரர் தெருவைச் சேர்ந்தவர் முகமது உசேன் (வயது45). இவர் தனது வீட்டில் தென்னை மரம் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு நத்தத்தில் இடி மின்னலுடன் மழை பெய்தது.அப்போது முகமது உசேன் வீட்டில் இருந்த தென்னை மரத்தின் மீது திடீரென மின்னல் தாக்கி இடி விழுந்தது.

இதில் அந்த தென்னை மரம் தீ பற்றி எரிய தொடங்கியது. மேலும் மரத்தில் இருந்து தீப்பொறிகள் கொட்ட தொடங்கியது. இதைப் பார்த்த முகமது உசேன் நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்புதுறையினர் தென்னை மரத்தில்ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News