தைலம் மர தோப்பில் தீ விபத்து - போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

ஜெயங்கொண்டம் அருகே தைல மர தோப்பில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு போராடி அணைத்தனர்.

Update: 2024-05-31 05:44 GMT

தீ விபத்து 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பிச்சனூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் ஆர் எஸ் பதி (தைல மரம்) தோப்பில் திடீரென தீப்பற்றி தோப்பு முழுவதும் தீ மல மலவென அனைத்து இடங்களிலும் பரவி கொழுந்துவிட்டு தெரிந்து கொண்டிருந்தது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிந்தனர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சித்து அருகே  நெருங்கிய போது நெருங்க முடியாத அளவில் தீ மளமளவென தைல மர தோப்பு முழுவதும் பிரகாசமாக தெரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் அருகில் இருந்த மர கிளைகளை உடைத்து அதன் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து மீண்டும் தண்ணீர் பீய்ச்சி அடித்து  நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை போராடி அணைத்தனர்.இதனால் பிச்சனூர் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News