உயர் தொழில் நுட்ப பூங்காவில் தீ விபத்து

குமாரபாளையம் அருகே உயர் தொழில் நுட்ப பூங்காவில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர் .

Update: 2024-02-18 04:26 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வளையக்காரனூர், காவேரி உயர் தொழில்நுட்ப பூங்காவில், நேற்று மாலை 04:00 மணியளவில் குளிர் சாதன கருவியில் உள்ள ஸ்பான்ச் எனப்படும் பஞ்சு போன்ற பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மேல் தளத்தில்  தீ பரவியது. இது குறித்து குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தர, நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நேரில் வந்த அவர்கள், தண்ணீர் பீய்ச்சியடித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். குளிர்சிக்காக மேலே போடப்பட்ட அட்டைகள் அகற்றப்பட்டு தண்ணீர் ஊற்றி முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டது. இதில் ஜவுளி உள்ளிட்ட  எந்த பொருட் சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.  இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News