பழைய இரும்பு கடையில் தீ விபத்து

தென்காசி மாவட்டம்,வீரசகாமணி பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 4லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தனர்.

Update: 2024-02-25 09:07 GMT
சங்கரன்கோவில் அருகே பழைய இரும்பு கடையில் தீ விபத்து போலீசார் விசாரணை

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வீரசகாமணி சேர்ந்த துரைராஜ் என்பவர் மெயின் ரோட்டில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார், இதில் சுமார் 4 லட்சம் மதிப்புள்ள பழைய இரும்பு பிளாஸ்டிக் பேப்பர் அட்டை போன்ற பொருட்களை இருப்பு வைத்துள்ளார், மின் கசிவு காரணமாக பேப்பரில் தீப்பிடித்து உள்ளது இதை கவனித்த துரைராஜ் சங்கரன்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்,

தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கடையம் முழுவதும் பரவாமல் லாவகமாக தீயை அணைத்தனர், இதனால் அருகில் உள்ள பழைய இரும்பு கடை பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் காப்பாற்றப்பட்டது, இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினார்.

Tags:    

Similar News