கொடைக்கானல் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டு தீ

கொடைக்கானல் மச்சூர் வனப்பகுதியில் காட்டு தீயால், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-03-08 15:07 GMT

கொடைக்கானல் மச்சூர் வனப்பகுதியில் காட்டு தீயால், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பக‌ல் நேர‌ங்க‌ளில் கடும் வெப்பம் நிலவி வருகிறது, இதன் காரணமாக, புத‌ர்க‌ள், செடி, கொடிகள் புல்வெளிகள் காய்ந்து சருகுகளாக உள்ளன,இதனால் மலைப்பகுதியில் உள்ள வருவாய் நிலங்களிலும்,வனப்பகுதிகளிலும், தனியார் தோட்டப்பகுதிகளிலும் ஆங்காங்கே தீ எரிந்து வருகிறது,

இந்நிலையில் கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட மச்சூர் வனப்பகுதியில் இரவு வேளை முதல் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் காட்டு தீயானது கட்டுகடங்காமல் மளமளவென பரவி எரிந்து வருகிறது, இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளும்,பறவை இனங்களும் வனப்பகுதியினை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது,

மேலும் இந்த தீயை அணைக்கும் முயற்சியில் வனப்பணியாளர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் இப்பகுதியில் காட்டு தீ தொடர்வதால் புகை மண்டலமாக காட்சியளிக்கின்ற‌து மேலும் இந்த தீயானது நாளை காலைக்குள் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்படும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்...

Tags:    

Similar News